சும்மாவா கொடுத்தாங்க Y பிரிவு பாதுகாப்பு!

சும்மாவா கொடுத்தாங்க Y பிரிவு பாதுகாப்பு!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதன் காரணமாக அவருக்கு Y பிரிவு பாதுகாப்பினை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வருடம் ஜீலை மாதம் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வை மக்களிடம் கொண்டு சேர்க்கும், பணியில் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அண்ணாமலையின் பக்கம் இளைஞர்கள் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். இதற்கு, முக்கிய காரணமே இவரின் எளிமை மற்றும் துணிச்சலான செயல்பாடுகளே. இப்படிப்பட்ட, தலைவருக்காக தான் இத்தனை ஆண்டு காலம் நாங்கள் காத்துக் கொண்டு இருத்தோம் என்று இளைஞர்கள் கூறும் அளவிற்கு செல்வாக்கு பெற்ற தலைவராக அண்ணாமலை மாறி வருகிறார்.

மேலும், அண்ணாமலையின் அசுர வளர்ச்சி, மக்கள் மத்தியில் இவருக்கு பெருகும் ஆதரவு மற்றும் ஆளும் கட்சியின் ஊழல்களை மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்டும் விதம் என அரசியலில் சூறாவளியாக சுழன்று கொண்டே இருக்கிறார். இதுதவிர, மின்சாரத்தில் ஊழல், இனிப்பு பண்டத்தில் ஊழல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மக்கள் முன்பு வைத்து கொண்டே இருக்கிறார். உண்மையான எதிர்க்கட்சி அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழக ஊடகங்களில் அண்ணாமலையின் கேள்விகள் தலைப்பு செய்தியாக மாறி வருகிறது என்பது நிதர்சனம்.

இப்படியாக, தொடர்ந்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தி.மு.க.வை திணறடித்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இதன்காரணமாக, ஆளும் கட்சி இவர் மீது கடும் கோவத்தில் உள்ளது. அந்த வகையில், மாநில அரசு இதுநாள் வரை அண்ணாமலைக்கு, வழங்கி வந்த பாதுகாப்பை குறைத்து கொண்டது. மேலும், தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மேலும், கடந்த மாதம் பிப்ரவரி-10 அன்று சமூக விரோதி ஒருவன், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதை தமிழகமே நன்கு அறியும். அதனை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், ஆமீன்புரம் பகுதியை சேர்ந்த யூசுப்-46 தனது முகநூல் பக்கத்தில் பா.ஜ.க தலைவருக்கு பகீர் கொலை மிரட்டல் விடுத்து இருந்தான். இந்நிலையில், அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (‘Y’ பிரிவு) பாதுகாப்பு வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


Share it if you like it

One thought on “சும்மாவா கொடுத்தாங்க Y பிரிவு பாதுகாப்பு!

  1. Mr.Annamalai is super star in Tamilnadu politicians. He is well educated and also MBA, IPS Police, also Tamilan and a Farmer. So many opposition leaders DMK and their 13 useless lazy corrupted politicians are jealousy on Mr.Annamalais great progress in Tamilnadu politics.

Comments are closed.