வைரலாகும் அண்ணாமலை புகைப்படம்!

வைரலாகும் அண்ணாமலை புகைப்படம்!

Share it if you like it

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் ஒரு சிறுமி செல்பி எடுக்கும் புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா? செய்தியை முழுவதுமாக படியுங்கள்.

விஷயம் இதுதான்… பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல் வாதிகளில் குறிப்பிடத்தக்க நபராக வலம் வருகிறார். இவர், தற்போது தனது சொந்த ஊரான சொக்கம்பட்டி அமைந்திருக்கும் கரூர் மாவட்டம் மற்றும் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு சிறுமி தனது தந்தையின் செல்போனை வாங்கி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார்.

இதென்ன பிரமாதம், அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டால் பெருமை என்று கருதி பலரும் செல்பி எடுத்துக் கொள்வது சகஜம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் சரிதான். ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்பதுதான் ஹைலைட். ஆம்! அந்த சிறுமியின் தந்தை தி.மு.க.வைச் சேர்ந்தவர். அவரது செல்போனில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் படத்தை வைத்திருக்கிறார். அதோடு, அவர் தி.மு.க. கரை வேட்டியையும் கட்டி இருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போதைய நிலையில், தி.மு.க.வும், பா.ஜ.க.வும்தான் எதிரெதிர் கட்சிகளாக பார்க்கப்படுகின்றன. அப்படி இருக்க, எதிர்க்கட்சியின் தலைவரான அண்ணமைலையுடன் தனது மகளை செல்பி எடுக்க வைத்திருக்கிறார் அந்த தி.மு.க. பிரமுகர். இதன் மூலம், அண்ணாமலையின் ஆளுமையும், அவரது அரசியல் செல்வாக்கும் எந்தளவுக்கு இருக்கிறது என்பது நிரூபணமாகிறது. இந்த போட்டோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it

One thought on “வைரலாகும் அண்ணாமலை புகைப்படம்!

Comments are closed.