பா.ஜ.க கவுன்சிலர் மீது காங்., முஸ்லீம் லீக் தாக்குதல்!

பா.ஜ.க கவுன்சிலர் மீது காங்., முஸ்லீம் லீக் தாக்குதல்!

Share it if you like it

கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சி அலுவரகத்தில் பா.ஜ.க பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில். ஆளும் கட்சியான தி.மு.க மற்றும் எதிர்கட்சியான அ.தி.மு.க-விற்கு அடுத்து. மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்து உள்ளது. பா.ஜ.க-வின் இந்த அசுர வளர்ச்சி, அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக, பா.ஜ.க தமிழகத்தில் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது.

அதே போல, கேரள மாநிலத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சியும், வாக்கு சதவீதமும் படி படியாக உயர்ந்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள். பா.ஜ.க.வினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதை ஊடகங்கள், பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் தான், கேரள மாநிலம் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில். பா.ஜ.க கவுன்சிலர் மீது காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நபர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் உரிமை குறித்து தொடர்ந்து பேசி வரும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி போன்றவர்கள், பா.ஜ.க கவுன்சிலருக்கு ஏற்பட்ட அநீதிக்கு. எதிராக குரல் கொடுப்பார்களா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்த காணொளியை, பா.ஜ.க மூத்த தலைவர் மற்றும் கோவை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.


Share it if you like it