இரு மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை!

இரு மாநிலங்களில் பா.ஜ.க. முன்னிலை!

Share it if you like it

மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி இரண்டு மாநிலங்களில் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளதாக தகவல் வருகின்றன.

அந்த வகையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் – 34 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதேபோல, 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் – 39 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it