பா.ஜ.க. வெற்றி: சஞ்சய் ராவத் கருத்து!

பா.ஜ.க. வெற்றி: சஞ்சய் ராவத் கருத்து!

Share it if you like it

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க 4 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பா.ஜ.க-வின் வெற்றி குறித்து வெளியிட்டுள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பஞ்சாப், உத்திரகாண்ட், உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், இன்று 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியிட்டப்பட்டது. இதில், நான்கு மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை முதன் முறையாக கைப்பற்றியுள்ளது. எதிர்பார்த்த மாதிரியே காங்கிரஸ் போட்டியிட்ட, அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

இப்படியாக, காங்கிரஸ் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், எல்லாம் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. இந்த நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பிரபல ஊடகமான ஏஎன்ஜ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறவில்லை. பஞ்சாபில் மக்கள் மற்றொரு வாய்ப்பைப் பெற்று ஆம் ஆத்மி கட்சியைத் தேர்ந்தெடுத்தனர். பா.ஜ.க.வின் வெற்றி அவர்களின் தேர்தல் நிர்வாகத்தின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தயவில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா ஆட்சியை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it