அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பட்டப் பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இதுதான் என்றும் இதைவிட அரசுக்கு என்ன தலைகுனிவு வேண்டுமென்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.