CAA எதிர்ப்பு போராட்டத்தில் மோதல் – “முதல்ல ஒத்துமையா இருங்கய்யா, அதுக்கப்புறம் போராடலாம்” நெட்டிசன்கள் கிண்டல் !

CAA எதிர்ப்பு போராட்டத்தில் மோதல் – “முதல்ல ஒத்துமையா இருங்கய்யா, அதுக்கப்புறம் போராடலாம்” நெட்டிசன்கள் கிண்டல் !

Share it if you like it

டெல்லியின் ஜாப்ராபாத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் சுமார் 500 முஸ்லிம்கள் திரண்டு CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதில் பெரும்பாலானார்கள் பெண்களே இருந்தனர். இந்த போராட்டத்தால் ஜாப்ராபாத் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதால் மெட்ரோ நிலையம் மூடப்பட்டது.

இதைப்போல மவுஜ்புரிலும் முஸ்லிம்கள் CAA-வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதில் இரு பிரிவினருக்கு இடையே திடிரென மோதல் ஏற்பட்டு இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கினர். இதனால் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதல்களை தடுத்தது. பின்னர் மவுஜ்புர் மெட்ரோ ரெயில் நிலையமும் மூடப்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டன.

இந்த செய்தி ஊடகம் மூலம் பரவ “உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே முதலில் ஒற்றுமையாய் இருங்கள் அதன் பிறகு போராடலாம் என்று நெட்டிசன்கள் இந்த போராட்டக்காரர்களை கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.


Share it if you like it