தம்பியை வரவேற்ற அண்ணன் – விண்வெளியை வெற்றி கொண்ட பாசப் போராட்டம் – வெற்றியின் விளிம்பில் சந்திராயன் 3

தம்பியை வரவேற்ற அண்ணன் – விண்வெளியை வெற்றி கொண்ட பாசப் போராட்டம் – வெற்றியின் விளிம்பில் சந்திராயன் 3

Share it if you like it

சுதந்திர இந்தியாவில் ஆரம்ப காலத்தில் வானிலை ஆய்வு மற்றும் தட்ப வெப்ப மாறுதல் பற்றிய முன் எச்சரிக்கை தகவலுக்கு கூட நாம் மேற்குலக நாடுகளை நம்பியிருந்த துரதிருஷ்டமே நீடித்தது. 70 களில் மெல்ல தொடங்கிய விண்வெளி ஆய்வு இந்திராவின் காலத்தில் விக்ரம் சாராபாய் அப்துல் கலாம் என்று வேகமாக பயணித்தது. அவர் காலத்தில் நிகழ்ந்த சிரிக்கும் புத்தர் சாதனை மேற்குலக கண்களை உறுத்தியதால் இந்திய வளர்ச்சியை முடக்க பல வகையிலும் பிரயத்தனம் செய்தார்கள் அதற்கு உள்நாட்டு துரோகிகளும் துணை நின்றதன் பலன் தான் இந்திய விண்வெளியில் கிரையோஜெனிக் என்னும் நவீன இயந்திரம் வடிவமைப்பு ஆய்வில் இருந்த நம்பி நாராயணன் வீண்பழி சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது . ஒரு புறம் அவர் பெரும் கொடுமையை அனுபவிக்கவும் மறுப்புறம் இந்திய விண்வெளி ஆய்வு முடக்கப்படவும் நேர்ந்தது . பின் நாளில் அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து வந்தாலும் கால் நூற்றாண்டு கால விண்வெளி ஆய்வு முடக்கம் காரணமாக 50 ஆண்டுகள் நாம் பின்தங்கிய துரதிஷ்டம் நீடித்தது. இந்திய விஞ்ஞானிகளை இந்நிகழ்வு மனதளவில் நொறுக்கி பின்டைய செய்தது.

பின் நாளில் வந்த வந்த ஆட்சியாளர்கள் விண்வெளி ஆய்வு வெறும் தற்சார்பு அல்லது வல்லரசு பயணம் மட்டுமல்ல. உள்நாட்டு பாதுகாப்பு தொடங்கி விவசாயம் நீர் வள மேலாண்மை இயற்கை சீற்றங்களின் முன்னெச்சரிக்கை என்று பல வகையிலும் அது நம் அன்றாட தேவைக்கு உதவும் விஷயங்கள் என்பதால் அதற்கு கூடுதல் முன்னுரிமை தர தொடங்கியதன் பலனாக அப்துல் கலாம் உள்ளிட்டவர்களே பெரும் பிரயத்தனத்தால் இந்திய விண்வெளியில் தொடர்ச்சியான செயற்கை கோள் ஆய்வுகள் ஏவுகணை சோதனைகள் விண்வெளி ஆய்வுகள் இன்று உள்நாட்டு தற்சார்பை எட்டியது.

பிரித்வி அக்னி என்ற ஏவுகணைகள் உள்நாட்டு பாதுகாப்பை கடந்து இன்று வெளிநாடுகளில் செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவி அதன் மூலம் பெரும் சர்வதேச உறவையும் பொருளாதார பலத்தையும் முன்னெடுக்கும் வெற்றிப்பாதையில் இந்திய இஸ்ரோ பயணிக்கிறது . நம்பினாராயணன் முடக்கப்பட்டதன் காரணமாக பின் தங்கிப் போன விண்வெளி ஆய்வை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்ற இந்திய விஞ்ஞானிகள் தங்களின் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த கூட்டு முயற்சியின் பலனாக சில ஆண்டுகள் முன்பு சந்திராயன் என்ற சந்திரனை ஆய்வும் மங்கள்யான் என்ற பெயரில் செவ்வாய் கிரக ஆய்வும் செய்யும் ஒரு நீண்ட கால முயற்சியும் தொடங்கப்பட்டது.

பல ஆண்டுகள் முன்பு சந்திராயன் 1 முயற்சி ஆய்வு மற்றும் கட்டமைப்பு வகையில் முழுமையான வெற்றியை கொடுத்தாலும் திட்டமிட்ட வகையில் இலக்கை எட்ட முடியாமல் இறுதி கட்டத்தில் இந்தியா இஸ்ரோவால் சுயமாக நொறுக்கப்பட்டது. நான்காண்டுகள் முன்பு சந்திராயன் 2 முயற்சி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதன் பயணம் வெற்றியடைந்து நிலவில் கால் பதித்தாலும் துரதிருஷ்ட வசமாக அதன் கட்டுப்பாடுகளும் தகவல் தொடர்புகளும் செயலிழந்து கிட்டத்தட்ட இந்திய இஸ்ரோவின் கண்காணிப்பு கட்டுப்பாட்டில் இருந்து காணாமல் போனது.

இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தலைமையிலான எண்ணற்ற விஞ்ஞானிகள் இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு உழைத்ததன் பலன் வெற்றியின் விளிம்பில் போய் தோல்வி அடைந்ததும் சந்திராயன் 2 முயற்சி செயல் இழந்ததும் தேசத்தை பெரும் வேதனையில் ஆழ்த்தியது. அந்த முயற்சி தோல்வி அடைந்ததில் குமுறி அழுத விஞ்ஞானிகளை பார்க்கும்போது அந்தத் திட்டத்திற்காக தேசம் இழந்த சில நூறு கோடிகள் அற்பமாகி போனது . அந்த விஞ்ஞானிகளின் குழந்தையை பறி கொடுத்த தகப்பனை போன்ற துயரை உணர்ந்து தேசம் கலங்கியது . தந்தையை தேற்றும் மகனைப் போல பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளை உங்களின் வகையில் நீங்கள் சாதித்து விட்டீர்கள் . வெற்றி தோல்வி நம் கைகளில் இல்லை. கவலை வேண்டாம் நாம் இன்று இல்லையே என்றேனும் ஒரு நாள் சாதிப்போம்.உங்களாலால் தேசம் பெருமையடைகிறது. உங்களோடு பக்க பலமாக தேசம் நிற்கிறது என்று தட்டிக் கொடுத்து தேற்றியதை ஒட்டுமொத்த உலகமும் ஆச்சரியத்தோடும் நெகிழ்ச்சியோடும் பார்த்தது .

ஆனால் சொந்த நாடு வளருவதை முன்னேறுவதை சாதிப்பதை எந்த வகையிலும் விரும்பாத வாழ்வது பாரதத்தில் விசுவாசம் பகை நாடுகளுக்கு என்று இருக்கும் பரதேச அடிவருடிகள் சந்திராயன் 2 ன் தோல்வியை வெற்றி திருவிழாவாக கொண்டாடி தீர்த்தார்கள். பல ஆண்டுகள் விஞ்ஞானிகளின் உழைப்பு சில நூறு கோடிகள் பாரதத்தின் இழப்பு வீணாய் போனதில் அவர்களின் மட்டற்ற மகிழ்ச்சி வெளியாகி அவர்களின் உண்மை முகத்தை தேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சந்திராயன் 2 தோல்வியில் முடிந்தாலும் துவண்டு விடாத இஸ்ரோ விஞ்ஞானிகள் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பயணிப்போம் என்று விடாப்பிடியான முயற்சியோடு மீண்டும் தங்களின் அடுத்த கட்ட முயற்சியான சந்திராயன் 3 வடிவமைப்பு கட்டமைப்புக்கான முயற்சியில் இறங்கினார்கள் . மத்திய அரசு அவர்களை முழு ஒத்துழைப்பு ஒருங்கிணைப்போடு சுதந்திரமாக இயங்க அனுமதித்தது. தேவையான கட்டமைப்புகள் பாதுகாப்புகள் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புகள் என்று அனைத்தையும் அவர்களின் தேவை அறிந்து செய்து கொடுத்தது. அதன் பலன் சந்திராயன் 3 சரியாக ஒரு மண்டலம் முன்பு தனது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது.

சந்திராயன் 3 என்ற விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கு அளவு கடந்த சுமையை தூக்கிச் செல்லும் பலவான் என்ற பொருளில் குண்டு பையன் என்ற பெயரிட்டு விஞ்ஞானிகள் மகிழ்ச்சியோடு வாழ்த்தி வழி அனுப்பினார்கள். கோடிக்கணக்கான தேச மக்களின் பிரார்த்தனைகள் இந்த மண்ணின் இறையருள் விஞ்ஞானிகளின் ஈடு இணையற்ற உழைப்பின் பலனாக தனது வெற்றிகரமான பயணத்தை தொடங்கிய குண்டு பையன் தான் சுமந்து சென்ற சுட்டிப் பையனை குறித்த நேரத்தில் சரியான இலக்கை எட்டிப் பிடித்து வெற்றிகரமாக இலக்கில் நிலை நிறுத்திவிட்டான்.

இதோ சந்திராயன் 3 லிருந்து நிலவை எட்டி விடும் தூரத்தில் இந்திய இஸ்ரோ வெற்றியின் விளிம்பில் நிற்கிறது. அதற்கான இறுதி கட்ட கவுண்டவுன்கள் அர்ப்பணிப்போடு கூடிய உச்சகட்ட பதட்டத்தில் இஸ்ரோவில் இருந்து முன்னெடுக்கப்படுகிறது. பாம்பாட்டிகளின் தேசம் என்று ஏளனம் பேசிய சர்வதேச சமூகம் இன்றைய சந்திராயன் 3 மூலம் வெற்றியை நோக்கி பயணிக்கும் இந்திய இஸ்ரோவை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்து புருவம் உயர்த்தி பார்க்கிறது.

இந்திய இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றிகரமாகும் பட்சத்தில் நிலவின் தென் துருவத்தில் களமிறங்கும் முதல் ஆய்வு பாரதத்தின் இஸ்ரோவின் ஆய்வாக மட்டுமே இருக்கும். அந்த வகையில் இது உலகின் பெரும் சாதனை முதல் சாதனை. இந்திய இஸ்ரோவின் இந்த வெற்றிப் பயணம் உலக வரலாற்றில் நீங்கா புகழோடு நிலைநிறுத்தப்படும். விஞ்ஞானிகளில் இந்த முயற்சியும் உழைப்பும் தேசத்தின் அர்ப்பணிப்பும் முழு வெற்றியை தர வேண்டும் என்று எண்ணற்ற தேசாபிமானிகள் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இறையருளால் நிலவை நெருங்கிய சந்திராயன்3 லிருந்து தொடங்கிய தகவல் தொடர்புகள் வெற்றிகரமான பலனை தரத் தொடங்கி இருக்கிறது. நான்காண்டுகள் முன்பு காணாமல் போனதாக கைவிடப்பட்ட ஆர்பிட்டர் 2 சந்திராயன் 2 தகவல் தொடர்பு தேடுகையின் மூலம் கண்டுபிடித்துள்ளது. அதனுடனான தகவல் தொடர்பின் மூலம் ஆர்பிட்டர் இரண்டின் இருப்பிடம் இன்னும் அதன் உயிர்ப்பு தகவலை இன்று இஸ்ரோவிற்கு சந்திராயன் 3 உறுதி செய்திருக்கிறது. சந்திராயன் 2 பற்றிய தேடுதலுக்கு உரிய பதிலாக சந்திராயன் 3 ற்கு வெல்கம் படி (welcome buddy) என்ற தகவல் ஆர்பிட்டர் இரண்டிலிருந்து சந்திராயனோடு பயணிக்கும் விக்ரம் லாந்தருக்கு தகவல் எட்டியிருக்கிறது.

உணர்வு பூர்வமான தொடர்புகளும் பாசப் போராட்டமும் இந்த மண்ணில் மனிதர்களைக் கடந்து இயந்திரங்களிலும் இருப்பதன் சாட்சியமாக நான்காண்டுகள் முன்பு விண்வெளியில் காணாமல் போன தனது அண்ணனை இன்று சந்திராயன் 3 என்ற தம்பி தேடி கண்டுபிடித்து தன் இஸ்ரோ குடும்பத்திற்கு தகவல் அனுப்பி இருக்கிறான். இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் நான்காண்டுகள் முன்பு தொலைத்த தங்களின் உழைப்பும் முயற்சியும் இன்னுமும் உயிர்ப்போடு இருக்கும் மகிழ்ச்சியோடு சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க செய்யும் முயற்சிகளுக்கு கவுண்டவுன்களை இறுதி கட்ட கண்காணிப்புகளை தகவல் தொடர்புகளை மும்முரமாகியிருக்கிறார்கள்.

ஆனால் பகைநாடுகள் கூட ஆச்சரியத்தோடு பாரதத்தை நோக்கி பார்க்கும் இந்த நிகழ்வை உள்நாட்டில் இருக்கும் அந்நிய அடிவருடிகளால் ஜீரணிக்க முடியாததன் வெளிப்பாடுதான் சந்திராயன் மூன்றில் இருந்து வெளிப்பட்ட புகைப்படம் என்ற பெயரில் தான்தோன்றித்தனமாக புகைப்படங்களை பதிவேற்றி சில்லறைத்தனமான தங்களின் மனநிலையை வெளிப்படுத்துவது. அதன் மூலம் சொந்த தேசத்தின் சாதனைகளை இந்திய இஸ்ரோவின் உழைப்பையும் பல ஆண்டுகள் பிரயத்தனம் செய்த விஞ்ஞானிகளின் கூட்டம் முயற்சியையும் அவமதிப்பதோடு இதை எல்லாம் வெற்றியாக வேண்டும் என்று பிரார்த்தனையோடு காத்திருக்கும் தேசத்தின் மக்களையும் புண்படுத்துகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் கூட வெற்றியின் விளிம்பில் நிற்கும் இந்திய இஸ்ரோ என்று தேசத்தை தட்டிக் கொடுக்க மனமில்லாமல் வாழ்வா சாவா என்ற நிலையில் நிற்பதாக தங்களின் வன்மத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார்கள்.

சொந்த தேசத்தின் வெற்றியை வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத இது போன்ற புல்லுருவிகள் இங்கு சில லட்சம் பேர் இருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் விண்வெளி ஆய்வின் இந்த மைல்கல் சாதனையை நிகழ்த்துவதற்காக பல ஆயிரம் இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களின் சுக துக்கம் குடும்பம் ஆரோக்கியம் உணவு உறக்கம் என்று அத்தனையும் தள்ளி வைத்து பல ஆண்டுகள் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கிறார்கள். இனியும் தங்களின் வாழ்நாள் முழுவதும் உழைக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு பிரயத்தனம் முன்பும் அவர்களின் உழைப்பும் பிரயத்தனமும் உரிய பலனைத் தர வேண்டும் என்று பக்கபலமாக இருக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு முன்பும் இந்த இந்திய இஸ்ரோ அரசின் முயற்சிகள் வெற்றிகரமாக பயணிக்க வேண்டும் தேசம் புதிய சாதனையை நிகழ்த்த வேண்டும் அதன் மூலம் உலக அரங்கில் புதியதொரு வெற்றி சரித்திரத்தில் பாரதம் பயணிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வோடு மனம் உருகி இறைவனை பூஜைக்கு கோடிக்கணக்கான தேச விமானிகள் தேசத்திற்கு உள்ளும் புறமும் ஒவ்வொரு கனவும் இறைவனின் பாதங்களைப் பிடித்து பிரார்த்தனை முன்பும் இந்த பரதேச அடிவருடிகள் வன்மம் காற்றில் கரைந்த கற்பூரமாகும்.

ஜான்சி ராணி துளசிராமன்.


Share it if you like it