ஹிந்து கல்லூரி மாணவி பலாத்காரம்: காங்கிரஸ் நிர்வாகி முகமது ருஹாப் மேமன் கைது!

ஹிந்து கல்லூரி மாணவி பலாத்காரம்: காங்கிரஸ் நிர்வாகி முகமது ருஹாப் மேமன் கைது!

Share it if you like it

காங்கிரஸ் கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின், மாநில பொதுச் செயலாளர் முகமது ருஹாப் மேமன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ருஹாப் மேமன். இவர், 2018-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (என்.எஸ்.யு.ஐ.), சத்தீஸ்கர் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஹிந்து பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் கல்லூரியில் சேர உதவி செய்திருக்கிறார். பின்னர், அந்த மாணவியின் செல்போன் நம்பரை வாங்கி அடிக்கடி போன் செய்து பேசியிருக்கிறார். தனக்கு கல்லூரியில் சேர உதவி செய்ததால் அந்த மாணவியும் நட்பின் அடிப்படையில் போனை எடுத்து பேசி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி அந்த கல்லூரி மாணவிக்கு போன் செய்த ருஹாப், தான் கான்கேர் பகுதியில் இருப்பதாகக் கூறி, வரச்சொல்லி இருக்கிறார். அந்த மாணவியும் வந்த நிலையில், அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு சிங்கார் பேட் வனப்பகுதிக்கு சென்றிருக்கிறார். பின்னர், ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தி, அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும், இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டி இருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவி, கான்கேரின் கோட்வாலி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து முகமது ருஹாப் மேமனை கைது செய்தனர்.

இதுகுறித்து பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்தீஸ்கரின் கான்கேரில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு மாநில பொதுச் செயலாளர் முகமது ருஹாப் மேமன் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர், இடைத்தேர்தலுக்கு இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் ஹிந்து பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். இதற்காக ராகுலும், பிரியங்காவும் சத்தீஸ்கர் செல்வார்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். ருஹாப் மேமன் சமூக ஊடகங்களில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிப்பதாகக் கூறி பல பதிவுகளை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மாநில பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முகமது ருஹாப் நீக்கப்பட்டிருப்பதாக, இந்திய மாணவர் அமைப்பின் மாநில தலைவர் நீரஜ் பாண்டே தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it