காங்கிரஸிற்கு கர்நாடக வக்ப் போர்ட் வாரியம் கெடு!

காங்கிரஸிற்கு கர்நாடக வக்ப் போர்ட் வாரியம் கெடு!

Share it if you like it

கர்நாடக வக்ப் போர்ட் வாரியம் காங்கிரஸ் கட்சிக்கு கெடு விதித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து இருக்கிறது. அந்த வகையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை. இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டவர்கள் முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக வக்ப் போர்ட் வாரிய தலைவர் ஷாபி சாதி காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். அதில், ஐந்து முஸ்லீம் அமைச்சர்கள், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் வீடு, வருவாய், கல்வி போன்ற முக்கியமான அமைச்சர்கள் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, கெடு விதித்துள்ளார் என்று கூட சொல்லலாம்.


Share it if you like it