பாரதப் பிரதமரை கிண்டல் செய்யும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ். இதற்கு, பா.ஜ.க. தக்க பதிலடியை கொடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இவருக்கு, இணையாக பாரதப் பிரதமர் மோடியால் என்றும் வர முடியாது என காங்கிரஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது. காங்கிரஸின் இந்த படத்திற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. மேலிடம் தக்க பதிலடியை கொடுத்துள்ளது. அதாவது, ஜவஹர்லால் நேரு ஊடகத்தின் மூலமாக மிகப்பெரிய தலைவராக காட்டப்பட்டு வருகிறார். ஆனால், அவர் வெறும் சாதாரண மனிதர்தான் என பா.ஜ.க. தக்க பதிலடியை கொடுத்திருக்கிறது.