வருவாய் ஆய்வாளர் மீது மணல் மாஃபியாக்கள் அட்டாக்!

வருவாய் ஆய்வாளர் மீது மணல் மாஃபியாக்கள் அட்டாக்!

Share it if you like it

திருச்சி அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற வருவாய்த்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது நரசிங்கபுரம். இக்கிராமத்தில் மணல் கடத்தல் நடப்பதாக துறையூர் தாசில்தார் வனஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது, பச்சமலை அடிவாரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மணல் கடத்தல் நடந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், அங்கிருந்த பொக்லைன் வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்று விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன், பொக்லைன் உரிமையாளர் தனபால் உள்ளிட்ட 3 பேர், வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை வழிமறித்து கற்களாலும், கைகளாலும் தாக்கி இருக்கிறார்கள். மேலும், மணி என்பவர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை கடித்து வைத்திருக்கிறார். இதில் காயமடைந்த பிரபாகரன், துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லைபோல…


Share it if you like it