முதல்வர் – துணை முதல்வர்: பதிலுக்கு பதில் பழிவாங்கி கொண்ட காணொளி வைரல்!

முதல்வர் – துணை முதல்வர்: பதிலுக்கு பதில் பழிவாங்கி கொண்ட காணொளி வைரல்!

Share it if you like it

கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மாறி மாறி தூங்கி வழிந்த காணளொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முதல்வரா சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் இருந்து வருகின்றனர். இவர்கள், இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அந்த அளவிற்கு இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தொடர்ந்து மோதல் போக்கிலேயே இருப்பர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது அருகில் இருந்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தூங்கி கொண்டிருந்தார். இச்சம்பவம், முதல்வருக்கு கடும் எரிச்சலையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், மற்றொரு அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது அருகில் இருந்த முதல்வர் சித்தராமையா தூங்கி கொண்டிருந்தார். இப்படியாக, இரு தலைவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்களிடையே நீர்பூத்த நெருப்பாக மோதல் உருவாகி வருகிறது. இந்த இரு தலைவர்களின் மோதலை அரசியல் ஞானி ராகுல் காந்தி எப்படி சமாளிப்பார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it