இணையத்தில் வெளியான ஆபாச படங்கள்… வசமாக சிக்கிய தி.மு.க. ஒன்றியத் தலைவர்!

இணையத்தில் வெளியான ஆபாச படங்கள்… வசமாக சிக்கிய தி.மு.க. ஒன்றியத் தலைவர்!

Share it if you like it

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தி.மு.க. ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஒருவர், பெண்களை ஏமாற்றி உல்லாசமாக இருந்த விவகாரம், இணையத்தில் போட்டோக்கள் வெளியானதால் அம்பலமாகி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள சேமக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருப்பவர் மணிவண்ணன். இவர், பெண்களுடன் தனிமையில் இருப்பது போன்ற ஆபாச படங்கள், கடந்த சில தினங்களாக தொடர்ந்து இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சேமக்கோட்டை கிராம மக்கள் சார்பில் கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அப்புகாரில், “எங்கள் ஊரைச் சேர்ந்த மணிவண்ணன், ஊராட்சி ஒன்றியத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். இவர், எங்கள் கிராமத்தில் உள்ள குடும்ப பெண்களிடம், அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசாங்கத்தில் இருந்து பல்வேறு சலுகைகளை பெற்றுத் தருவதாகவும் கூறி ஏமாற்றி இருக்கிறார். மேலும், அப்பெண்களிடம் தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்ததோடு, அதை தனது செல்போன் கேமராவிலும் பதிவு செய்திருக்கிறார். அதனை தற்போது இணையத்தில் பரப்பி வருகிறார்.

இதனால், எங்கள் கிராம பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர். எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மணிவண்ணனுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தரவேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, மணிவண்ணனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும் பெண்களின் ரகசியம் காக்கப்படும். மணிவண்ணன் மீது உரிய விசாரணை நடத்தி நிச்சயம் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று எஸ்.பி. உறுதி அளித்திருக்கிறார்.


Share it if you like it