டேட்டிங் ஆப் மூலம் காதல்வலை… புதுமாப்பிள்ளை கைக்கு காப்பு!

டேட்டிங் ஆப் மூலம் காதல்வலை… புதுமாப்பிள்ளை கைக்கு காப்பு!

Share it if you like it

டேட்டிங் ஆப் மூலம் காதல் வலைவீசி, அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, வெறொரு பெண்ணை திருமணம் முடிக்கவிருந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் அம்சா (பெயர் மாற்றம்). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், பின்னணி குரல் கலைஞராகவும் இருந்து வருகிறார். டேட்டிங் ஆப் மூலம் இவருக்கு காதல்வலை வீசி, உல்லாசமாக இருந்து விட்டு, அதை வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாகக்கூறி மிரட்டி 10 லட்சம் ரூபாய் கேட்ட இளைஞர் மீதுசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். அம்சா அளித்திருக்கும் புகாரில், “எம்.ஏ. கம்யூனிகேஷன் படித்திருக்கும் நான், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். 2016-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டேன். எனது பெற்றோர் மும்பையில் வசித்து வரும் நிலையில், நான் வில்லிவாக்கம் பகுதியில் தனியாக வசித்து வருகிறேன். இந்த சூழலில், 2020-ம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் விக்ரம் வேதகிரி என்பவர் அறிமுகமானார். சொந்தமாக மருந்துக் கம்பெனி வைத்திருப்பதாகவும், சென்னை திருநின்றவூரில் சொந்த வீட்டில் வசித்து வருவதாகவும் கூறினார்.

இதன் பிறகு நாங்கள் இருவரும் நேரில் சந்தித்து பழகி வந்த நிலையில், 2021-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று ஃபேஸ்புக் லைவ் மூலம் விக்ரம் தனது காதலை என்னிடம் கூறினார். பின்னர், பிப்ரவரி கடைசி வாரத்தில் என்னை ஐதராபாத்திற்கு டூர் அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு தாலிகட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டார். மேலும், என்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டார். இதனிடையே, நான் விவாகரத்தானவர் என்பது விக்ரம் குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டது. இதனால் அவரது வீட்டில் பிரச்னை ஏற்படவே, வீட்டைவிட்டு வெளியேறி வந்துவிட்டார். பிறகு, விக்ரமுக்குத் தேவையான பண உதவிகளை நான் செய்து வந்தேன். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, 2021 செப்டம்பர் 9-ம் தேதி அரும்பாக்கம் ஸ்ரீசுந்தர விநாயகர் கோயிலில் வைத்து எனது தாயார், நண்பர்கள் மற்றும் விக்ரமின் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்தோம். ஆனால், இதன் பிறகு விக்ரமின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. எனது வில்லிவாக்கம் வீட்டில் என்னை செக்ஸ் வீடியோக்களை பார்க்க வைத்து, அதன்படி நடந்து கொள்ளச் சொல்லி செக்ஸ் டார்ச்சர் செய்தார். மேலும், ஹோட்டலில் தங்கி, ஆபாச உடை அணிந்து வரச் சொல்லி, ஆபாச வீடியோவில் ஜோடியாக நடிக்கும்படி வாட்ஸ் ஆப் மூலம் அணுகினார்.

இந்த நிலையில், திடீரென கடந்த மார்ச் 5-ம் தேதி எனது வீட்டுக்கு வந்த விக்ரம், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் நானும், அவரும் உடலுறவு வைத்து கொண்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதோடு, எனது புகைப்படங்களை மார்பிங் செய்தும் சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டினார். தவிர, இனி அவரது வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்றும் மிரட்டி விட்டுச் சென்றார். இதுகுறித்து, நான் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, விக்ரம் வேறொரு பெண்ணை எதிர்வரும் 17-ம் தேதி தி.நகரில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் கிடைத்தது. ஆகவே, என்னை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி நிச்சயதார்த்தம் செய்து உல்லாசமாக இருந்துவிட்டு, அதை வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி வருதோடு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கும் விக்ரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, அம்சா புகார் மீது வழக்குப் பதிவு செய்த வில்லிவாக்கம் போலீஸார், இன்று காலை விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதாவது, நாளை மறுநாள் புதுமாப்பிள்ளையாக வெறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் விக்ரம். இதில் ஹைலைட் என்னவென்றால், டேட்டிங் ஆப் மூலம் விக்ரம் வேதகிரி ஏராளமான பெண்களிடம் விளையாடி இருக்கும் விவகாரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருப்பதுதான். அதாவது, வெப் சீரியலில் நடிக்க ஆள் தேவை, குறும்படங்களில் நடிக்க ஆள் தேவை என்று இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வாராம் விக்ரம். இதைப் பார்த்துவிட்டு தொடர்பு கொள்ளும் பெண்களிடம், ஆபாசமாகப் பேசி, பழகி, அவற்றை ஆடியோ மற்றும் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்ட, ஆபாச கதைகளாக மாற்றி, விற்பனை செய்து பணம் சம்பாரித்து வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, இன்னும் எத்தனை பெண்களிடம் இதேபோல விக்ரம் வேதகிரி ஏமாற்றி இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.


Share it if you like it