வெளியில் வந்தால் கடவுள் மறுப்பு , பேருந்துக்கு மட்டும் ஆயுத பூஜையா ?

வெளியில் வந்தால் கடவுள் மறுப்பு , பேருந்துக்கு மட்டும் ஆயுத பூஜையா ?

Share it if you like it

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை திருநாளான அக்டோபர் 23ம் தேதி ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் தாங்கள் பயன்படுத்தும் கருவிகள், பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவர். அதேபோல், தங்களின் வாகனங்களுக்கு வாழை மரங்களை கட்டி, சந்தனம், குங்குமம் பூசி வழிபடுவர். இந்நிலையில் கடவுள் மறுப்பு பிரசாரம் செய்துவரும் திராவிடர் கழகம் தலைவர் வீரமணி வேந்தராக இருக்கும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.

அக்கல்வி நிறுவனத்தின் பேருந்தில் வாழை மரம் கட்டி, சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து, மாலையிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it