பொய் செய்தி வெளியிட்ட தினகரன் – குவியும் கண்டனங்கள்

பொய் செய்தி வெளியிட்ட தினகரன் – குவியும் கண்டனங்கள்

Share it if you like it

“திருவாரூர் – காரைக்குடி ரயில் மார்க்கத்தினை மூடும் நடவடிக்கை – கேட் கீப்பர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்” எனும் தலைப்பிட்டு இன்றைய தினகரன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியகி இருந்தது. அதில் திருவாரூர் – காரைக்குடி ரயில் பாதையினை தென்னக ரயில்வே மூடப்போவது போல் தலைப்பிட்டு போலியாக செய்தி வெளிட்டு மக்களை போராட தூண்டும் வகையில் செய்தி வெளியாகி இருந்தது.

இச்செய்தியின் உண்மை தன்மையை அறிய பாஜகவின் கருப்பு முருகானந்தம், ஆசீர்வாதம் ஆச்சாரி ஆகியோர் களத்தில் இறங்கினர். திருச்சி டிவிஷனின் மூத்த வணிக மேலாளரை தொடர்பு கொண்டு விசாரித்ததில் இவ்விவகாரம் முற்றிலும் தவறான தகவல் என்றும் இந்த ரயில் மார்க்கத்தை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் கூறி உள்ளார். மேலும் இது குறித்த விரிவான அறிக்கையை சென்னையில் இருந்து வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் அமைதியாக இருக்கும் மக்களை மத்திய அரசுக்கு எதிராக போராட தூண்டும் விதமாக. பொய் செய்தி வெளியிட்ட தினகரன் பத்திரிகைக்கு பொதுத்தளங்களில் கண்டங்கள் குவிகிறது.blank


Share it if you like it