மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க நிர்வாகி..!

மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க நிர்வாகி..!

Share it if you like it

ஆட்சியில் இல்லாத பொழுதே தி.மு.க உறுப்பினர்கள் பிரியாணி கடை, சுண்டல் கடை, என்று தமிழக மக்களின் சொத்துக்களையும், பொருட்களையும், இன்று வரை கபளீகம் செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே..

பா.ஜ.க ஆளும் மாநிலம் என்றால் அலறி அடித்து கொண்டு கருத்தும் தி.மு.க.. தனது கட்சி தொண்டர்கள் செய்யும் கீழ்த்தரமான, ஈனதனமான, செயல்களை கண்டிக்காமல்  தொடர்ந்து மெளனம் காத்து வருகிறனர் என்பது கசப்பான உண்மை.

தர்மபுரி மாவட்டத்தில் ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி.. இளம் வயதிலேயே விதவையானவர்., பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது மாற்றுத் திறனாளி மகளுடன் வசித்து வருகிறார்…

தனது வீட்டின் அருகிலுள்ள வயல்வெளிக்கு சென்ற மகள் மிக நீண்ட நேரமாக திரும்பி வராமல் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்த தாய்.. கவலையுடன் மகளை தேடி அலைந்துள்ளார்… ஒரு நபர் வயல்பரப்பில் இருந்து ஓடுவதை அறிந்த அந்த தாய்.. சந்தேகம் அடைந்து அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்துள்ளார்..

அப்பொழுது அந்த மாற்றுத் திறனாளி பெண் குழந்தை அழுது கொண்டே.. தப்பியோடிய நபர்  தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மோற்கொண்ட பொழுது.. அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய நிர்வாகி கோவிந்தராஜ் என்பவன்., சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரியவந்ததுள்ளது.. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவன் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it