ஸ்டாலினுக்கு ஹிந்தி கிளாஸ் எடுக்க நான் தயார் – நடிகை குஷ்பு!

ஸ்டாலினுக்கு ஹிந்தி கிளாஸ் எடுக்க நான் தயார் – நடிகை குஷ்பு!

Share it if you like it

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை பா.ஜ.க. மூத்த தலைவர் நடிகை குஷ்பு வெளுத்து வாங்கி இருக்கிறார்.

வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாடத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது ; தி.மு.க-வைப் பார்த்துக் கேட்கிறேன். யாரை பார்த்து பயப்படுகிறீர்கள். அவர்மீது கேஸ் போடுகிறீர்கள். அவர் பார்க்காத கேஸா. இல்லை சட்டம் தெரியாதவரா. சட்டத்தை படித்து இறங்கி வேலை பார்த்தவர்தான் அண்ணாமலை. அடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் அது பா.ஜ.க-வால்தான் முடியும்.

இது தானாக சேரும் கூட்டம். காசு கொடுத்து கூட்டும் கூட்டம் அல்ல. வடமாநில மக்கள் குறித்து பேசியது யார். `பானி பூரி விற்கத்தான் லாயக்கு’ என்றது யார். `கக்கூஸ் கழுவுவதுதான் இவர்கள் வேலை’ எனச் சொன்னது யார். `இந்தி தெரியாது போடா என்றது யார்’. அண்ணாமலை மீது உள்ள நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. 24 மணி நேரத்தில் கைதுசெய்யுங்கள் என்றார். கைதுசெய்ய வேண்டியதுதானே. அவர் எதற்கும் அஞ்ச மாட்டார். பயம் என்பது பா.ஜ.க. டிக்ஸ்னெரியிலேயே இல்லை.

மடியில் கனம் இருந்தால்தானே பயம் இருக்கும். எந்த ஊழலும் இல்லாமல் ஆட்சி செய்யும் திறமை பா.ஜ.க-வுக்கு இருக்கிறது.

தமிழ் மக்கள், தமிழகம், தமிழ் மொழி எனப் பிரதமர் பேசி வருகிறார். ஆனால் இங்கே, இந்தித் திணிப்பு என மக்களை திசை திருப்புகிறார்கள். நீங்கள் நடத்தும் பள்ளிக்கூடத்தில் 2-வது மொழியாக இந்தி இருக்கிறது. பிரதமராகும் ஆசை உள்ளவர் முதல்வர். எனவே, இந்தி இப்போதிருந்தே கூட கற்றுக்கொண்டிருந்தாலும் இருப்பார். வேண்டுமென்றால் சொல்லுங்கள், எனக்கு இந்தி தெரியும் உங்களுக்கு (மு.க.ஸ்டாலின்) இந்தி கிளாஸ் எடுக்கிறேன். இந்தி எப்படி எழுத வேண்டும், படிக்க வேண்டும் என்று நான் சொல்லித் தருகிறேன்.

அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எங்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவுசெய்யுங்கள். ஒரு குரல் கொடுத்தால் அடங்கி உட்காருபவர்கள் நீங்கள் என்பது நன்றாகவே தெரியும்” என்று கூறினார்.


Share it if you like it