63 வருடம் வீணா போச்சு: தி.மு.க. உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்த தாத்தா!

63 வருடம் வீணா போச்சு: தி.மு.க. உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்த தாத்தா!

Share it if you like it

தி.மு.க.வின் உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்து பா.ஜ.க.வில் குடும்பத்தோடு இணைந்த முதியவர் ஒருவரின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தமிழக முதல்வராக, பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின்பு அரசு துறைகளில் அக்கட்சியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடி வருகிறது. இதன்காரணமாக, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் பெரும் தொய்வினை கண்டுள்ளன. இதுதவிர, சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரித்து வருகிறது. மேலும், தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் அட்டூழியங்கள் மற்றும் அடாவடிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வை சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இக்காணொளியில், அவர் இவ்வாறு பேசியுள்ளார் : தி.மு.க.வில் 63 வருடங்கள் இருந்து வருகிறேன். இதனால் எனக்கு எந்தவித பயனுமில்லை. ஆகவே, எனது குடும்பத்தோடு பா.ஜ.க.வில் இணைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தி.மு.க.வின் உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it