24 மணிநேர கெடு: முடிந்தால் கைது செய்… அண்ணாமலை பகீர் சவால்!

24 மணிநேர கெடு: முடிந்தால் கைது செய்… அண்ணாமலை பகீர் சவால்!

Share it if you like it

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது விடியல் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், அவர் தி.மு.க.விற்கு பகீர் சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாநில தொழிலாளர்கள் நலன் குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தி.மு.க. அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வகையில், பா.ஜ.க. தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ;

வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.

பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்!


Share it if you like it