ஆர்.எஸ். பாரதிக்கு தரமான  பதிலடி தந்த பா.ஜ.க.!

ஆர்.எஸ். பாரதிக்கு தரமான பதிலடி தந்த பா.ஜ.க.!

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதிக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரமான பதிலடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;

ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது. என்னிடம் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்ட வேண்டாம். ஆர்.எஸ்.பாரதி மட்டுமல்ல, அவர் தந்தையே வந்தாலும் சந்திக்கத் தயார். யாரும், எங்கும் தப்பிச் செல்ல முடியாது. “DMK Files பட்டியல் வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில், இதுவரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் இன்னும் அதிகப்படியான ஆதாரங்களை கொடுக்க இருக்கிறோம். இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம்.

ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது. அடுத்த வார இறுதிக்குள் டெல்லி சென்று தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தொடர்பாக சி.பி.ஐ.யில் வழக்குப்பதிவு செய்ய உள்ளேன். இதை அப்படியே விடப்போவது இல்லை. என்னுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என அவர் கூறினார்.


Share it if you like it