30 ஆயிரம் கோடி பணம்: பி.டி.ஆர். உளறிய  ஆடியோ வைரல்!

30 ஆயிரம் கோடி பணம்: பி.டி.ஆர். உளறிய ஆடியோ வைரல்!

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ ஒன்று தி.மு.க. மேலிடத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவரது, பேச்சுக்கள் மாற்று கட்சியை சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையில் இருக்கும். தவிர, ஆளும் கட்சிக்கு தர்ம சங்கடத்தை இன்று வரை உருவாக்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், நிதியமைச்சர் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் அமைச்சர் பேசியதாவது : தமிழக முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் கடந்த ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் குவித்துள்ளதாக பேசியிருக்கிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை அண்மையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it