திராவிட மாடல் இனி இந்தியாவிற்கே ஃபார்முலா: முதல்வரை தூர்வாரிய மக்கள்!

திராவிட மாடல் இனி இந்தியாவிற்கே ஃபார்முலா: முதல்வரை தூர்வாரிய மக்கள்!

Share it if you like it

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அண்மையில் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார் : திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கைகளை கொண்டது. இதை வைத்துக்கொண்டு திராவிட மாடல் என்ற பெயரில் தி.மு.க. ஆட்சி நடத்துகிறது. “நான் திராவிட ஆட்சி முறையை பாராட்டி ஆதரிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அத்தகைய ஆட்சிமுறை இங்கு எதுவும் இல்லை. இது ஒரு அரசியல் முழக்கம் மட்டும்தான். காலாவதியான சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி மட்டுமே உள்ளது.

‘ஒரே பாரதம், ஒரே இந்தியா’ என்ற கருத்தை ரசிக்காத ஒரு சித்தாந்தம் திராவிட மாடல் சித்தாந்தம். தேசிய சுதந்திரப் போராட்டத்தை சுட்டிக் காட்டும்போது, தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுதந்திரப் போராளிகள் தங்கள் உயிர் உட்பட எல்லாவற்றையும் கொடுத்த வரலாற்றை எப்படி நினைவிலிருந்து அழிக்க முற்படுகிறது? மாறாக, மொழி, இனவெறியை செயல்படுத்தும் கொள்கையாளர்களை முன்னிலைப்படுத்துகிறது. சமீபத்திய பட்ஜெட் உரையில் மற்ற மொழிகளை தவிர்த்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் 3.25 லட்சம் புத்தகங்களைக் கொண்ட கலைஞர் நூலகத்தை அரசு அமைக்கப் போகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இது பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் கருத்தியலாகும்” என்று கூறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக ஆளுநர் தெரிவித்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக, “திராவிட மாடலே இனி அனைத்து மாநில ஆட்சி நிர்வாக ஃபார்முலாவாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் இந்த வேளையில், ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் திராவிட மாடல் ஃபார்முலாதான் என தமிழக முதல்வர் கூறியிருப்பது சிறந்த நகைச்சுவை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it