தி.மு.க. ஆட்சியின் அவலம்: பாட்டாகவே பாடிய ஆசிரியர்!

தி.மு.க. ஆட்சியின் அவலம்: பாட்டாகவே பாடிய ஆசிரியர்!

Share it if you like it

ஸ்டாலின் அரசை கண்டித்து ஆசிரியர் ஒருவர் பாடிய பாடல் ஒன்று தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்தார். விடியல், கிடைக்கும் என நம்பிய மக்கள் இன்று வரை அணில் தொல்லையால் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீட் தேர்வு ரத்து, சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் என பல்வேறு வாக்குறுதிகளை விடியல் அரசு வழங்கி இருந்தது. அந்த வகையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பல்வேறு உறுதிமொழிகளை ஸ்டாலின் வழங்கி இருந்தார். ஆனால், ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடத்தை கடந்த விட்ட பின்பும் கூட, ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றபடவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள். தங்களை, நம்ப வைத்து மோசம் செய்த ஸ்டாலின் அரசின் அவலம் குறித்து, பாட்டாகவே பாடி தங்களது கோவத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இது குறித்தான, காணொளி தற்போது இணையத்தில் வைரலாக துவங்கி இருக்கிறது.

அதன் லிங்க் இதோ..


Share it if you like it