திராவிடியன் ஐடியாலஜி… இந்தியாவின் ஐடியாலஜி – நடிகர் கமலஹாசன்!

திராவிடியன் ஐடியாலஜி… இந்தியாவின் ஐடியாலஜி – நடிகர் கமலஹாசன்!

Share it if you like it

இந்தியா டுடே ஊடகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட ஆட்சியில் லஞ்சம், ஊழல், தலைவிரித்து ஆடி வருகிறது. இதனை, ஒழிக்க என்னால் முடியும் என்று கூறி மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவங்கியவர். அதன்பின், தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அக்கட்சி படுதோல்வியை தழுவியது. இதன்காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பா.ஜ.க., தி.மு.க. என்று மாற்று கட்சிக்கு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்ற கமல் தி.மு.க.வுடன் நெருக்கம் காட்ட துவங்கினார்.

அதன் பின்பு, தி.மு.க.விற்கு ஆதரவாக பல்வேறு மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார். ஊழல் கட்சிகளுக்கு எதிரானவன் நான் என்று கூறியவர். இன்று, தி.மு.க.விற்கு முட்டு கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது கொடுமையிலும் கொடுமை. அந்த வகையில், இந்தியா டுடே ஊடகத்திற்கு நடிகர் கமல் அண்மையில் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், திராவிடியன் ஐடியாலஜி, இந்தியாவின் ஐடியாலஜி என்று கூறியிருக்கிறார்.

தனது பேச்சிற்கு மிகப்பெரிய கை தட்டல் கிடைக்கும் என கமல் எதிர்பார்த்தார். ஆனால், யாரும் கை தட்டாமல் அமைதியாக இருந்துள்ளனர். இச்சம்பவம்தான், பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it