தி.மு.க. நிர்வாகி கருணாநிதி அடாவடி!

தி.மு.க. நிர்வாகி கருணாநிதி அடாவடி!

Share it if you like it

தி.மு.க. நிர்வாகி ஒருவர் குடி போதையில் காவல்துறையினர் முன்னிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதன் பின்பு, தமிழக மக்கள் தங்களது நிம்மதியை இழந்து விட்டனர் என்பதே நிதர்சனம். தொடர் மின்வெட்டு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என பல்வேறு வரிகளை விதித்து பொதுமக்களை தமிழக அரசு வாட்டி வதைத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதே நிலையும் பொதுமக்களுக்கும் இருந்து வருகின்றன.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையினரின் பாதுகாப்பே தற்போது கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. இவ்வாறாக, விடியல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, திருநெல்வேலி மாவட்ட களக்காடு தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருப்பவர் கருணாநிதி. இவர், தனது அடியாட்களுடன் வந்து ஊர் மக்கள் முன்னிலையில் ஜாதி ரீதியாகவும் ஆபாசமாகவும் பேசி இருக்கிறார். இதையடுத்து, ஊர் மக்கள் கொடுத்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு வந்து இருக்கின்றனர். இதையடுத்து, அடாவடியில் ஈடுபட்டு வந்த தி.மு.க. நிர்வாகியை சமாதானம் செய்ய காவல்துறையினர் முயன்று இருக்கின்றனர். ஆனால், அந்த தி.மு.க. நிர்வாகி காவல்துறையினர் முன்னிலையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதன் லிங்க் இதோ.


Share it if you like it