2024 நாடாளுமன்ற தேர்தல்: அண்ணாமலை ஆருடம்!

2024 நாடாளுமன்ற தேர்தல்: அண்ணாமலை ஆருடம்!

Share it if you like it

தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால். நாட்டை கூறுபோட்டு விடுவார்கள் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி செய்த சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து வருகிறார். இதுதவிர, தி.மு.க.வின் போலி முகத்திரையை தொடர்ந்து கிழித்த வண்ணம் உள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், அவர் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அக்காணொளியில், இவ்வாறு பேசினார்; வருகிற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் வெற்றி பெற்றால். என்னிடம் பத்து எம்.பி., உன்னிடம் பத்து எம்.பி., உன்னிடம் ஒரு ஜோக்கர், என்னிடம் ஒரு 25 எம்.பி இருக்கிறார்கள். ஆகவே, எனக்கு பாதுகாப்புத்துறையை கொடு, அவருக்கு போக்குவரத்துறையை கொடு, தொலைதொடர்பு துறையை கொடு என சூதாட்ட கிளப்பில் எப்படி? சீட் ஆடுவார்களோ அதுபோன்று இந்தியாவை இவர்கள் கூறுபோட்டு விடுவார்கள்.

குடல் உனக்கு, வயிறு எனக்கு, இதயம் உனக்கு, ரத்தம் எனக்கு என்று ரத்த காட்டேரி போன்று காங்கிரஸ் ஆட்சியில் செயல்பட்டார்கள். ஆனால், 2014 – ஆம் ஆண்டுக்கு பிறகு பாரதப் பிரதமர் மோடி அதனை மாற்றி காட்டி இருக்கிறார். தற்போது, ஒரே கட்சி (பா.ஜ.க.) ஒரே மனிதன் (மோடி) நாட்டை சிறப்பாக ஆண்டு கொண்டு இருக்கிறார் என அண்ணாமலை குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it