வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்க – ஆர்.எஸ்.பாரதி காமெடி!

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்க – ஆர்.எஸ்.பாரதி காமெடி!

Share it if you like it

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் டி.ஆர்.பாலுவிடம் தான் கேட்க வேண்டும். முதல்வரை ஏன்? தொல்லை செய்கிறீர்கள் எனும் பொருள்படும் விதத்தில் ஆர்.எஸ். பாரதி பேசி இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க மூத்த தலைவரும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ். பாரதி. இவர், சர்ச்சைக்குறிய வகையில் பேசி பொதுமக்களிடம் வாங்கி கட்டிக் கொள்வது இன்று வரை தொடர்கதையாக இருக்கிறது. அந்தவகையில், பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தி.மு.க போட்ட பிச்சை என்றும், ஊடகங்களை மும்பை ரெட் லைட் உடன் இணைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசி இருந்தார். இவரின், கருத்து பட்டியல் சமூக மக்களிடையே கடும் கோவத்தையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர்கள் டெல்லியில் உள்ள தேசிய எஸ்சி ஆணையத்தில், ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்திருந்தனர்.

இப்படியாக, தொடர்ந்து ஏதேனும் சர்ச்சைக்குறிய வகையில் பேசி வருகிறார். இந்தநிலையில் தான், இவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ். பாரதி கூறியதாவது;

தேர்தல் அறிக்கையை தயார் செய்தது டிர். ஆர்.பாலு. ஏதாவது, விட்டு போய் இருந்தால் நீங்கள் அவரை தான் கேட்க வேண்டும். தெரியாமல் சில முண்டங்கள் மு.க ஸ்டாலினை கேட்டு கொண்டு இருக்கிறார்கள். கேட்க வேண்டிய ஆளே டி.ஆர் பாலு தான் என்று அறிவுபூர்வமாக பேசியுள்ளார். இதுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரியே தேவலாம், அவராவது ஒரு லாஜிக் வைத்திருந்தார் 2 ரேஷன் கார்டு 2 குடும்பம் என்று அவரை விட இவர் ரொம்ப மோசம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Share it if you like it