தி.மு.க. பேச்சாளர்களுக்கு ராணுவ வீரர் பதிலடி!

தி.மு.க. பேச்சாளர்களுக்கு ராணுவ வீரர் பதிலடி!

Share it if you like it

கவர்னரை ஒருமையிலும், ஏகவசனத்திலும் பேசி கொலை மிரட்டலும் விடுத்த தி.மு.க. பேச்சாளர்கள் ரெட் லைட் ஆர்.எஸ்.பாரதி, கூவம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு ராணுவ வீரர் குருமூர்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.

விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. தற்போது, மேகாலயாவில் சி.ஆர்.பி.எஃப். வீரராக பணிபுரிந்துவரும் இவர், தேசத்துக்கு ஆதரவாக வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். உதாரணமாக, தி.மு.க.வின் ஹிந்து எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிராக வீடியோ வெளியிட்ட குருமூர்த்தி, ஹிந்தியை திணிச்சா தப்பு, மதுவை திணிச்சா தப்பில்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல, தனி தமிழ்நாடு கேட்ட திருமாவளவனுக்கு எதிராகவும் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோவைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ராணுவ வீரர் குருமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் அரங்கேறியது.

இந்த சூழலில், சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை விமர்சித்து ஒருமையிலும், ஏகவசனத்திலும் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர் தி.மு.க. பேச்சாளர்கள் ரெட் லைட் பாரதி, கூவம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ராணுவ வீரர் குருமூர்த்தி. அந்த வீடியோவில், செருப்பால் அடிப்பேன் என்று கவர்னரை திட்டியதோடு, பயங்கரவாதியை ஏவிவிட்டு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள் தி.மு.க.வினர். இது அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். ஆகவே, இதை வைத்தே தி.மு.க. பேச்சாளர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், தி.மு.க. பேச்சாளர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


Share it if you like it