படுதோல்வியடைந்த திமுக அரசால் 11 வயது சிறுமி உயிரிழந்த சோகம்..!

படுதோல்வியடைந்த திமுக அரசால் 11 வயது சிறுமி உயிரிழந்த சோகம்..!

Share it if you like it

மழை நீரில் நடந்து சென்ற 11 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்.

நீதி, நேர்மை, நியாயம், மக்களை வஞ்சிக்கும் திட்டம், ஆட்சிக்கு வந்தால், உடனே நடைமுறைக்கு கொண்டு வருவோம். என அடுக்கடுக்கான வசனங்களை பேசி ஆட்சி கட்டிலில் அமர்ந்த தி.மு.க. நாட்கள் செல்ல செல்ல விடியல் ஆட்சியின் சுயரூபத்தை மக்கள் மெல்ல மெல்ல உணர துவங்கியுள்ளனர்.

தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்ததா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.

முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால், சென்னையில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் கடும் இன்னல்களையும், அவதியையும், அடைந்து வரும் நிலையில், சென்னையை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், மழை நீரில் நடந்த சென்ற பொழுது மின்சாரம் தாக்கி மரணம் அடைந்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

விடியல் ஆட்சி என்பதால் முன்களப்பணியாளர்கள், சில்லறை போராளிகள், வழக்கம் போல கப்சிப். ஆபாச பேச்சாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்கிய தமிழக முதல்வர், தனது குழந்தையை இழந்த தாயிற்கு நேரில் சென்று ஆறுதல் கூற வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

/https://www.facebook.com/watch/?v=1526673924355210


Share it if you like it