ஐரோப்பியர்களின் தாய்மொழி சமஸ்கிருதம்: தி.மு.க. ராஜிவ் காந்தி!

ஐரோப்பியர்களின் தாய்மொழி சமஸ்கிருதம்: தி.மு.க. ராஜிவ் காந்தி!

Share it if you like it

ஐரோப்பியர்கள் பேசியது சமஸ்கிருதம் என்கிற மொழி என்று தி.மு.க. மாணவர் அணித் தலைவர் ராஜிவ் காந்தி பேசியிருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியில் பேச்சாளராக இருந்தவர் ராஜிவ் காந்தி. அப்போது, தி.மு.க.வையும், தி.மு.க. தலைவர்களையும், திராவிடக் கழகத் தலைவர்களையும் இவர் திட்டாத திட்டுக்கள் இல்லை. அந்தளவுக்கு மிகவும் கேவலமாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்தவர். ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர், தி.மு.க.வில் சேர்ந்த இவருக்கு மாணவர் அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு, தற்போது சீமானை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடந்த திராவிட மாடல் பயிற்சிப் பாசறையில் தி.மு.க. மாணவர் அணித் தலைவரான ராஜிவ் காந்தி கலந்துகொண்டு பேசியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில்தான் ஐரோப்பியர்கள் பேசியது சமஸ்கிருதம் என்கிற மொழி. ஆங்கிலத்தின் தாய்மொழி சமஸ்கிருதம் என்று கூறியிருக்கிறார் ராஜிவ் காந்தி. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it