தேசியக் கல்விக் கொள்கை: மத்திய அமைச்சருக்கு, முன்னாள் வேந்தர் கடிதம்!

தேசியக் கல்விக் கொள்கை: மத்திய அமைச்சருக்கு, முன்னாள் வேந்தர் கடிதம்!

Share it if you like it

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என இ.பாலகுருசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி. இவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;

தேசிய கல்விக் கொள்கை – 2020-ல் இடம்பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கு ஏராளமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதன்படி உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த நாட்டின் உயர்கல்வி கட்டமைப்பை இருமடங்காக அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன.

உயர்கல்வி நிறுவனங்களின் புதுமையாக்கம் மற்றும் ஆய்வுத் திறனை மேம்படுத்துவதற்கு திறமையான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள் அவசியமாகும். தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டபடி உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கும், 2 சதவீதம் ஆய்வுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். அப்போதுதான், திட்டமிட்ட இலக்கை நம்மால் அடைய முடியும். தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் சரியான திசையில் உள்ளது என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடுள்ளார்.


Share it if you like it