இந்தியாவுடன் இணையுங்கள்… கார்கில் ரோட்டை திறந்து விடுங்கள்: கில்கிட் பல்டிஸ்தான் மக்கள் போராட்டம்!

இந்தியாவுடன் இணையுங்கள்… கார்கில் ரோட்டை திறந்து விடுங்கள்: கில்கிட் பல்டிஸ்தான் மக்கள் போராட்டம்!

Share it if you like it

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிக்கும் கில்கிட் பல்டிஸ்தான் மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்தது கில்கிட் பல்டிஸ்தான். இதனை, பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. இப்பகுதியை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனாலும், இதை இந்தியாவும் ஏற்கவில்லை, பல்டிஸ்தான் மக்களும் ஏற்கவில்லை. ஆகவே, ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் பகுதிகளும் இணைந்திருப்பது போன்ற வரைபடமே, இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடமாக இருந்து வருகிறது. இதனிடையே, கில் கில்கிட் பல்டிஸ்தான் மக்களை பாகிஸ்தான் இரண்டாம் தர மக்களாக நடத்துவதாகவும், தங்கள் நிலங்களை பாகிஸ்தான் ராணுவம் அபகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், கில் கில்கிட் பல்டிஸ்தான் பகுதியில் உள்ள நிலங்களை ராணுவம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முசாபராபாத் நகரில் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கில் கில்கிட் பல்டிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா ஃபரூக் ஹைதர், பாதுகாப்புப் படையினர் நிலங்களை கையகப்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சூழலில்தான், கில் கில்கிட் பல்டிஸ்தான் மக்கள், தாங்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், ஆகவே, கார்கில் சாலையில் உள்ள எல்லைத் தடுப்பை பாகிஸ்தான் அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவும், டோக்ரா மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் தங்கள் பகுதி இருந்ததையும், பல்டிஸ் இன மக்களில் ஒரு பகுதியினர் தற்போது லடாக்கில் இருப்பதையும் சுட்டிக்காட்டி, தாங்கள் மீண்டும் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், தங்களது உறவினர்களுடன் ஒன்று சேர வேண்டும் என்றும் கில் கில்கிட் பல்டிஸ்தான் மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், இந்தியாவுடன் கில் கில்கிட் பல்டிஸ்தான் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தானை எதிர்த்தும், இந்தியாவை ஆதரித்தும் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


Share it if you like it