எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியெல்லாம் ஏமாற்றினீர்: ஸ்டாலினை தெறிக்கவிட்ட பெண் ஊழியர்!

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எப்படியெல்லாம் ஏமாற்றினீர்: ஸ்டாலினை தெறிக்கவிட்ட பெண் ஊழியர்!

Share it if you like it

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எப்படி எல்லாம் எங்களை ஏமாற்றினீர்கள் என்று ஸ்டாலினை, அரசு பெண் ஊழியர் ஒருவர் கிழித்து தொங்க விட்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் தி.மு.க., தேர்தல் பிரசாரத்தின்போது ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாகக் கூறினார். ஆனால், அவ்வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என்பதோடு, நிறைவேற்ற முடியாது என்றும் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தில் பேசிய பெண் ஊழியர் ஒருவர், தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஸ்டாலின் எப்படியெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றினார் என்று கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. குறிப்பாக, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த வீடியோ படு வைரலாக்கி வருகின்றனர்.


Share it if you like it