லவ் ஜகாத்… லிவ் இன்… கேங் ரேப்… நசீர் உசேன் உட்பட 3 பேர் கைது!

லவ் ஜகாத்… லிவ் இன்… கேங் ரேப்… நசீர் உசேன் உட்பட 3 பேர் கைது!

Share it if you like it

குஜராத்தில் ஹிந்து பட்டியலின சிறுமியை லவ் ஜிகாத் என்கிற காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தியதோடு, நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த நசீர் உசேன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் அகமதபாத் மாவட்டம் வஸ்த்ராபூரைச் சேர்ந்தவர் நசீர் உசேன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த சூழலில், அப்பகுதியிலுள்ள ஒரு அழகுக்கலை நிலையத்தில், அதே பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமி பணிபுரிந்து வந்தார். இங்கு நசீர் உசேன் அடிக்கடி வந்து போயிருக்கிறார். அப்போது, தனது பெயர் சமீர் பிரஜாபதி என்றும், தான் ஒரு ஹிந்து என்றும் கூறியிருக்கிறார். பின்னர், மேற்கண்ட ஹிந்து சிறுமியிடம் நெருங்கிப் பழகி இருக்கிறார். காலப்போக்கில், தனக்கு திருமணமானதை மறைத்து, லவ்ஜிகாத் மூலம் அச்சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார்.

பின்னர், அச்சிறுமியின் ஆதார் அட்டையை பயன்படுத்தி, ஆனந்தநகர் சாலையில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார். பிறகு, அக்குடியிருப்பில் இருவரும் லிவ்-இன் உறவில் தங்கியிருக்கிறார்கள். அப்போது, அச்சிறுமியுடன் உல்லாசமாக இருந்த பல்வேறு சந்தர்ப்பங்களில், அதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டார். இதைக் காட்டி மிரட்டி, தனது நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்து, அச்சிறுமியை விருந்தாக்கி இருக்கிறார். அதோடு, இதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டி இருக்கிறார். இந்த சூழலில், ஒரு நாள் அச்சிறுமியிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கிறார். பணம் தராவிட்டால் மேற்கண்ட வீடியோ மற்றும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி இருக்கிறார்.

இதனால் மனமுடைந்த அச்சிறுமி தற்கொலைக்கு முயன்றார். இதன் பிறகுதான், மேற்கண்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. நசீரின் இந்த செயலுக்கு அவரது மனைவி, மைத்துனி மற்றும் மைத்துனரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இதையடுத்து, மேற்கண்ட சம்பவம் தொடர்பாக வஸ்த்ராபூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நசீர், அவரது மனைவி, மைத்துனர் ஆகியோரை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம் மற்றும் லவ் ஜிகாத் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அச்சிறுமி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கு எஸ்.சி.-எஸ்.டி. பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தலைமறைவான நசீரின் மைத்துனர் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது நண்பர்கள் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர்.


Share it if you like it