ஹிந்துக்களுக்கு சுடுகாடுகூட சொந்தமில்லையாம்!

ஹிந்துக்களுக்கு சுடுகாடுகூட சொந்தமில்லையாம்!

Share it if you like it

ஹிந்துக்களுக்கு சுடுகாடுகூட சொந்தமில்லை என்று எழுத்தாளரும், பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கும் ஹிந்து கோயில்கள் அனைத்தும், தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட இந்து சமய அறிநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. அதேசமயம், கிறிஸ்தவ சர்ச்களும், இஸ்லாமியர்களின் மசூதிகளும் அந்தந்த மதத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. மேலும், ஹிந்து கோயில்களில் இருந்து கிடைக்கும் உண்டியல் வருமானம், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை ஹிந்து கோயில்களின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது.

ஆனால், ஹிந்து கோயில்களில் இருந்து கிடைக்கும் வருவாய் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோர்ட்டில் பலரும் வழக்குத் தொடர்ந்து நிலையில், ஹிந்து கோயில் வருமானத்தை, கோயில் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். எனினும், இதை தமிழக அரசு கடைப்பிடிப்பதில்லை. ஆகவே, இதை சுட்டிக்காட்டும் ஹிந்து அமைப்புகள், ஹிந்துக் கோயில்களையும் ஹிந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதையும், தமிழக அரசு செய்ய மறுக்கிறது.

இந்த நிலையில்தான், ஹிந்துக்களுக்கு கோயில் மட்டுமல்ல, சுடுகாடு கூட சொந்தமில்லை என்று பிரபல எழுத்தாளரும், பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான மாரிதாஸ் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “ஹிந்துக்களின் சுடுகாடும் அரசு நிலத்தில்தான் இருக்கிறது. அதேபோல, கிறிஸ்தவர்களின் கல்லறையும் அரசு இடத்தில்தான் இருக்கிறது. ஆனால், ஹிந்துக்களின் சுடுகாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கிறிஸ்தவர்களின் கல்லறை அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆக மொத்தம் தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்கு சுடுகாடுகூட சொந்தமில்லாத நிலைதான் நிலவுகிறது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it