பொங்கல் பரிசு தொகையை சிறப்பாக வழங்கியமைக்காக ரேஷன் கடை ஊழியருக்கு ரூ. 1- கோடியே 7 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் 33, 609 கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும். மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கான தொகை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் செலுத்தப்பட்டும்.