ஜெப பேனா வாங்கலியோ ஜெப பேனா… கிறிஸ்தவ மதபோதகரின் தில்லாலங்கடி!

ஜெப பேனா வாங்கலியோ ஜெப பேனா… கிறிஸ்தவ மதபோதகரின் தில்லாலங்கடி!

Share it if you like it

ஜெபிக்கப்பட்ட பேனா விற்பனைக்கு தயாராக இருக்கிறது. இதன் விலை வெறும் 15 ரூபாய்தான் என்று 2 ரூபாய் பேனாவை 15 ரூபாய்க்கு இயேசு அழைக்கிறார் சபையின் நிர்வாகிகள் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தினகரன் என்பவரால் நிறுவப்பட்டது இயேசு அழைக்கிறார் சபை. இச்சபை மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதேபோல, மோசடி குற்றச்சாட்டுகளும் உண்டு. காருண்யா பல்கலைக்கழகத்தை நிறுவி, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார்கள் றெக்கை கட்டின. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இச்சபையினர்தான் முதன் முதலில் சி.டி. மூலம் வியாதிகளை குணப்படுத்துவதாகக் கூறி கிறிஸ்தவ மக்களை ஏமாற்றியது. ஜெபத்தின் மூலமாக வியாதிகளை குணப்படுத்துவதாகக் கூறியும் ஏமாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்தான், தற்போது நவீன முறையில் மோசடியைத் தொடங்கி இருக்கிறார்கள். அதாவது, 2 ரூபாய்க்கு பேனாவை வாங்கி, அந்த பேனா ஜெபிக்கப்பட்ட பேனா என்று கூறி விற்பனை செய்து வருகின்றனர். அந்த பேனாவில் பரிட்சை எழுதினால் நல்ல மதிப்பெண் பெற முடியும். அதேபோல இந்த பேனாவால் எழுதி தொடங்கும் எல்லா தொழில்களும் நன்றாக வளர்ச்சியடையும் என்று கூறி வருகின்றனர். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இது உங்களுக்காக ஜெபிக்கப்பட்ட பேனா. இந்த ஜெப பேனாவின் விலை 15 ரூபாய். இதை வாங்கி பயன்பெறுங்கள் என்று பிரசாரகர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை நம்பி அப்பாவி கிறிஸ்தவ மக்களும் 15 ரூபாய் கொடுத்து அந்த பேனாவை வாங்கிச் சென்றதுதான் பரிதாபம்.


Share it if you like it