‘வாயை மூடிக்கிட்டு உட்காரு’… தொடரும் பொன்முடியின் அடாவடி!

‘வாயை மூடிக்கிட்டு உட்காரு’… தொடரும் பொன்முடியின் அடாவடி!

Share it if you like it

குறைகளை சொன்ன பெண்ணைப் பார்த்து, வாயை மூடிக்கிட்டு உட்காரு என்று அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுமக்களை மிரட்டுவதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு நிகர் பொன்முடிதான். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய பொன்முடி, ஓசி பஸ்லதானே வந்தீங்க என்று மிகவும் கேவலமாகக் கூறினார். தொடர்ந்து, தனது தொகுதி மக்கள் போராட்டம் நடத்தியபோது பேச்சுவார்த்தை நடத்த வந்த பொன்முடி, ஒருவரை பார்த்து வேலையை பார்த்துக்கிட்டு போய்யா என்றார். கடந்த வாரம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைக்க வந்த பொன்முடியிடம், மக்கள் குறைகளை சொல்ல, பதிலுக்கு அப்படியே எனக்கு ஓட்டுப்போட்டு கிழிச்சுட்டீங்க என்று கடுமை காட்டினார்.

இந்த நிலையில்தான், மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பொன்முடி. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, தையல் மெஷின், கேஸ் ஸ்டவ் என பல பொருட்களை வழங்கி விட்டு பேசினார். அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பற்றி பொன்முடி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் எழுந்து எல்லாம் குறையாகத்தான் இருக்கு என்று சொன்னார். உடனே ஆத்திரமடைந்த பொன்முடி, அப்பெண்ணைப் பார்த்து, எரிச்சலுடன் சைகையில் கையை வைத்து வாயை மூடுக்கிட்டு உட்காரு என்று சொன்னவர்.

மீண்டும் அந்தப் பெண் பேச முயற்சிக்கவே, உங்க வீட்டுக்காரர் இருக்காரா என்று கேட்க, அப்பெண் அவர் எப்பவோ போய்ச் சேர்ந்துட்டார் என்று சொன்னார். உடனே, நக்கலாக சிரித்த பொன்முடி, நல்ல வேளை அவரு போயிச் சேர்ந்துட்டார் என்று கூறவே, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே, மேடையிலிருந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தினரை பார்த்து அட சும்மா இருங்கம்மா என்று சொல்ல, சுதாரித்துக் கொண்ட பொன்முடி, நீங்க சும்மா இருங்கப்பா. அவங்க குறையைத்தானே சொல்றாங்க என்று சொல்லி சமாளித்தார். இப்படி பொன்முடி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

நேற்றுதான் கே.என்.நேரு ஆட்கள், திருச்சி சிவா வீட்டையும், காரையும் சூறையாடி எனது தூக்கத்தைக் கெடுத்தார்கள். இப்போது பொன்முடி மீண்டும் பெண்களிடம் வம்பிழுத்து தூக்கத்தைக் கெடுக்கிறார் என்று புலம்புகிறாராம்..


Share it if you like it