பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கண்ணதாசன் இல்லையாம்: தடா ரஹிம் உருட்டிய புது உருட்டு!

பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கண்ணதாசன் இல்லையாம்: தடா ரஹிம் உருட்டிய புது உருட்டு!

Share it if you like it

பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியவர் கண்ணதாசன் அல்ல என தடா ரஹிம் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய தேசிய லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் தடா ரஹிம். இவர், நான் தான் மிகப்பெரிய அறிவாளி என்பது போல பேச கூடியவர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவினை குறிப்பிட்டு சொல்லலாம்.

அவரின் பதிவு இதோ ;

ஆடு, மாடு, மீன் உட்பட அசைவ உணவு உண்பவர்கள் இல்லை என்றால். மீன் சாப்பிடவில்லை என்றால் கடலில் கப்பல் போகாத அளவிற்கு மீன்கள் தொந்தரவு இருக்கும் ஆடு மாடு சாப்பிடவில்லை என்றால் சாலை முழுவதும் வாகனங்கள் மட்டுமின்றி மனிதர்களே போக முடியாது இதை நவீன ஆர்எஸ்எஸ் பாஜக சங்கிள் உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் அறிவார்ந்த தமிழக மக்கள் இவரது அறிவு திறனை புரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட சூழலில் தான், திருவிளையாடல் திரைப்படத்தில் இடம் பெற்ற ”பாட்டும் நானே! பாவமும் நானே! என்ற பாடலை எழுதியவர் கவிஞர். கா.மு. ஷெரிப் என்று குறிப்பிட்டு இருக்கிறார். கண்ணதாசன் எழுதிய பாடலை திரித்து தவறான கருத்தை பதிவு செய்த தடா ரஹிம்மை பொடாவில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it