ஆர்ப்பரிக்கும் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்… பதைபதைக்க வைக்கும் வீடியோ!

ஆர்ப்பரிக்கும் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்… பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Share it if you like it

ஆர்ப்பரிக்கும் அருவியில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போர் மனதை பதைபதைக்க வைத்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் இருக்கும் பல அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அந்த வகையில், சிவமோகா பகுதியில் உள்ள அரிசினங்குடி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இந்த சூழலில், அப்பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர், அருவியில் குளிக்கச் சென்றிருக்கிறார். ஆனால், அருவியில் அளவுக்கதிகமாக தண்ணீர் கொட்டியதால், அருவியின் அழகை ரசித்தபடியே, தனது நண்பரை வீடியோ எடுக்கச் சொல்லி இருக்கிறார்.

நண்பரும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, அருவியின் மிக அருகில் சென்று, அங்குள்ள பாறை மீது ஏறி நின்றிருக்கிறார். தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்வதால், பாறையில் பாசி படர்ந்து காணப்பட்டது. அந்த பாறை மீது நின்றதால், பாசி வழுக்கி இளைஞர் திடீரென அருவி தண்ணீருக்குள் விழுந்தார். அவரை அருவி நீர் அடித்துச் சென்றது. இதைப் பார்த்த அவரது நண்பர் பதைபதைக்கு கூக்குரல் எழுப்பினார். அந்த இளைஞர் உயிருடன் மீட்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி காண்போர் மனதை பதைபதைக்க வைத்திருக்கிறது.


Share it if you like it