மணிப்பூர் போராட்டம் ஒரு கேடா? தி.மு.க. மா.செ.வை தெறிக்கவிட்ட மா.ஊ. தலைவி!

மணிப்பூர் போராட்டம் ஒரு கேடா? தி.மு.க. மா.செ.வை தெறிக்கவிட்ட மா.ஊ. தலைவி!

Share it if you like it

தன்னை பற்றி ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை தட்டிக் கேட்க துப்பில்லை, இதுல மணிப்பூர் போராட்டம் ஒரு கேடா என்று தி.மு.க. மாவட்டச் செயலாளரை பஞ்சாயத்து தலைவி தெறிக்கவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மகளிரணி தலைவியுமான கனிமொழி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில், தென்காசியிலும் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, திடீரென வெகுண்டெழுந்த தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவி தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபனிடம், என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அசிங்கமாகவும், தரக்குறைவாகவும் பதிவிட்டவர்களை தட்டிக் கேட்கத் துப்பில்லை. மணிப்பூர் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்பது ஒரு கேடா என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார். இதனால் மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it