சாலையின் அவலம்: எம்.எல்.ஏ. முன்பு  இளைஞர் செய்த தரமான சம்பவம்!

சாலையின் அவலம்: எம்.எல்.ஏ. முன்பு இளைஞர் செய்த தரமான சம்பவம்!

Share it if you like it

சாலையில் தேங்கியுள்ள நீரில் குளித்து, துணி துவைத்த இளைஞரின் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். தமிழகத்தில், எப்படி ஆட்சி நடைபெற்று வருகிறதோ, அதைவிட பன்மடங்கு அங்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்து உள்ளன. இதையடுத்து, சமீபத்தில் அங்கு பெய்த மழையில் சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து, சாலையில் பயணித்தோர் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இளைஞர் ஒருவர் தேங்கிய மழை நீரில், குளித்து விட்டு துணி துவைத்து உள்ளார். இக்காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இதையடுத்து, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. அங்கு வந்துள்ளார். இதனை அறிந்த அந்த இளைஞர் அவர் முன்பு யோகாசனம் செய்து காண்பித்து தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.


Share it if you like it