‘இறுதிச் சடங்கிற்கு தயாராக இருங்கள்’: ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு பி.எஃப்.ஐ. பகிரங்க கொலை மிரட்டல்!

‘இறுதிச் சடங்கிற்கு தயாராக இருங்கள்’: ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு பி.எஃப்.ஐ. பகிரங்க கொலை மிரட்டல்!

Share it if you like it

எங்கள் நாட்டில் நீங்கள் அமைதியாக வாழவில்லை என்றால், உங்களின் இறுதிச் சடங்கிற்கு தயாராக இருங்கள் என்று பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோஷம் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அமைப்பு சோஷியல் டெமாகரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) என்கிற பெயரில் அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது. இவ்விரு அமைப்பினருக்கும் சிமி, அல்கொய்தா, அல்உம்மா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) கண்டுபிடித்திருக்கிறது. மேலும், இவ்விரு அமைப்பினர்தான் நாட்டில் வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால், இந்த அமைப்புகள் நாட்டில் சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டும் இருக்கிறது.

கடந்த மாதம் நாடு முழுவதும் நடந்த ராமநவமி விழா, ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளில் ஹிந்துக்கள் ஊர்வலத்தில் கல்வெறிந்து கலவரத்தில் ஈடுபட்டது இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான். இதையடுத்து, பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய அமைப்புகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன மாநில மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புகள். மேலும், மேற்படி இரு அமைப்புகளையும் தடை செய்ய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில்கூட, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது, பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. போன்ற அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள். இவை எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகள் என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், கேரளாவில் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள் பி.எஃப்.ஐ. அமைப்பினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா “மக்கள் பெருந்திரள் பேரணி” என்ற நிகழ்ச்சியை கடந்த 21-ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்பினர் கைகளில் கொடிகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஒருவரின் தோளின் மீது அமர்ந்திருக்கும் 10 முதல் 12 வயதுடைய சிறுவன் ஒருவன் கோஷங்களை எழுப்ப, ஊர்வலத்தில் கலந்துகொண்ட மற்றவர்களும் தொடர்ந்து முழக்கமிடுகிறார்கள்.

அந்த சிறுவனின் கோஷம் இதுதான்… “எங்கள் மண்ணில் நீங்கள் அமைதியாக வாழவில்லையென்றால், உங்கள் இறுதிச் சடங்குகளுக்குத் தயாராக இருங்கள். நீங்கள் அமைதியாக வாழவில்லை என்றால் (இந்துக்களுக்கள்) வாய்க்கரிசியை தயாராக வைத்திருங்கள். நீங்கள் அமைதியாக வாழவில்லை என்றால் (கிறிஸ்தவர்கள்) மெழுகுவர்த்தியை தயாராக வைத்திருங்கள். நாங்கள் உங்களுக்கு மரணத்தை பரிசளிக்க வந்து கொண்டே இருக்கிறோம். நாங்கள் சொன்னபடிதான் நீங்கள் இங்கு வாழ வேண்டும். இல்லையென்றால், உங்களை எப்படி அமைதியாக வாழ வைப்பது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தாக்கப்பட்டாலும், உங்களையும் சேர்த்துக் கொன்று விடுவோம். இஸ்லாத்துக்காக உயர்நீத்த தியாகி என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

அயோத்தி பாபர் மசூதியில் மீண்டும் தொழுகை நடத்துவோம். வாரணாசி கியான்வாபி மசூதியிலும் தொழுகையை தொடர்வோம். இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ்… சங்கிகளுக்கு நினைவூட்டுகிறோம், நாங்கள் பாகிஸ்தானுக்கும் போகமாட்டோம், வங்கதேசத்துக்கும் போகமாட்டோம். அதற்கு பதிலாக, இந்த மண்ணுக்குள் செல்வோம். சங்கிகளே, நாங்கள் செல்வதற்கு முன் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். நாங்கள் மண்ணுக்கள் சென்றால், உங்களையும் எங்களுடன் அழைத்துச் செல்வோம்” என்று கோஷம் எழுப்பினார்கள். இந்த வீடியோ கேரளாவையும் தாண்டி, இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இதைப் பார்த்த ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். இதையடுத்து, இதுகுறித்து கேரள மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.


Share it if you like it