சிறுமிக்கு போதை, வதை… சுல்தானா கைது!

சிறுமிக்கு போதை, வதை… சுல்தானா கைது!

Share it if you like it

கேரளாவில் விடுதியில் தங்கி இருந்த சிறுமிக்கு போதைப் பொருட்களை கொடுத்து சிறார்வதை செய்த, விடுதி உரிமையாளர் சுல்தானா உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்தவர் சுல்தானா. இவர், கொச்சியில் பெண்கள் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த விடுதியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகளும், பெண்களும் பணம் கொடுத்து தங்கி பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். சுல்தானாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருந்திருக்கிறது. ஆகவே, சுல்தானா போதைப் பொருட்களை வாங்கி, விடுதியில் தங்கியுள்ள பெண்களுக்கும் சப்ளை செய்திருக்கிறார். மேலும், சுல்தானாவின் விடுதிக்கு சில ஆண்களும் வந்து சென்றிருக்கிறார்கள். இத்தகவல் கொச்சி சிட்டி போலீஸாருக்கு தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து, போலீஸார் அந்த பெண்கள் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விடுதியில் தங்கியிருந்த சிறுமி ஒருவருக்கு போதைப் பொருள்கள் கொடுத்து, சிறார்வதை செய்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறார்வதை செய்த 19 வயதான இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும், விடுதியில் தங்கியிருக்கும் பெண்களுக்கு போதைப் பொருள்கள் சப்ளை செய்தது, சிறார்வதைக்கு உடந்தையாக இருந்தது போன்ற குற்றத்துக்காக சுல்தானாவையும் போலீஸார் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட அனைவர் மீதும் போக்ஸோ பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், விடுதியில் தங்கியிருந்த வேறு சில பெண்களையும் சுல்தானா போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகவே, வேறு பெண்களுக்கும் பாலியல் தொல்லைகள் ஏற்பட்டிருந்ததா என்பது பற்றியும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it