போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்து போலீஸ் பைக்கையே திருடிச் சென்ற திருடன்… திராவிட மாடல் சட்டம் ஒழுங்கு!

போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்து போலீஸ் பைக்கையே திருடிச் சென்ற திருடன்… திராவிட மாடல் சட்டம் ஒழுங்கு!

Share it if you like it

கோவையில் திருடன் ஒருவன் போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்து போலீஸ் வாகனத்தையே திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார். இவர், காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்திலுள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், தனது இரு சக்கர வாகனத்தை, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 17-ம் தேதி இரவும் தனது இரு சக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்றார்.

இந்த சூழலில், அன்றையதினம் நள்ளிரவு தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த ஒரு திருடன், செல்வகுமாரின் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், தமிழகத்தில் போலீஸ் வாகனத்தையே துணிச்சலாக திருடும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


Share it if you like it