பட்டப்பகலில் துணிகரம்… ஜவுளிக்கடை முன்பு நிறுத்தி இருந்த டூவீலரை திருடிய கும்பல்… வைரலாகும் வீடியோ!

பட்டப்பகலில் துணிகரம்… ஜவுளிக்கடை முன்பு நிறுத்தி இருந்த டூவீலரை திருடிய கும்பல்… வைரலாகும் வீடியோ!

Share it if you like it

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜவுளிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை 4 பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகம் முழுவதுமே கொலை, கொள்ளை சம்பவங்கள் மட்டுமல்லாது, செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரு ஜவுளிக்கடை முன்பு டூவீலரை நிறுத்துவைத்து துணி எடுக்கச் சென்றிருக்கிறார் ஒருவர். நீண்ட நேரமாக அவர் வராததைக் கண்ட ஒரு திருட்டு கும்பல், அந்த வண்டியை திருடிச் சென்று விட்டது.

முதலில், அந்த வண்டியில் அமர்வதுபோல நைசாக அமர்கிறான் ஒரு திருட்டு ஆசாமி. பின்னர், அந்த இரு சக்கர வாகனத்தின் சைடு லாக்கை காலால் உடைத்து விட்டு இறங்கிக் கொள்கிறான். இதன் பிறகு, மற்றொரு நபர் வந்து அந்த வாகனத்தை தனது சொந்த வாகனம் போல தள்ளிக் கொண்டு செல்கிறான். இந்த இரு திருடர்களுக்கும் பக்கபலமாக 2 பேர் பாதுகாப்பு நிற்கிறார்கள்.

இந்த காட்சி அப்பகுதியில் இருந்த ஒரு சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகிறார்கள்.


Share it if you like it