தமிழகத்திற்கு எண்ணற்ற சேவை: நேரில் சென்று நன்றி தெரிவித்த எல். முருகன்!

தமிழகத்திற்கு எண்ணற்ற சேவை: நேரில் சென்று நன்றி தெரிவித்த எல். முருகன்!

Share it if you like it

தமிழகத்திற்கு வேண்டிய உதவிகளை உடனே செய்து தரும் ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, நேரில் சென்று தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பதாவது ;

தமிழகத்திற்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை வழங்கிவரும் மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தி்த்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தேன்.

சென்னை எழும்பூர் – மதுரை தேஜஸ் அதிவிரைவு ரயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் ரயிலுக்கு பாபநாசத்தில் நிறுத்தம், மேட்டுப்பாளையம்-கோவை இடையே மெமு ரயில் சேவை வாரத்தில் 7 நாட்கள் இயக்கப்பட வேண்டும், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 2 தானியங்கி நடைபாதை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழக மக்களுக்கு முழு ஊக்கத்தை தரும் என்றும், இதுகுறித்து பயணிகள், மூத்த குடிமக்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும், இந்த திட்டங்கள் பாரத பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் ரயில் சேவைகளை மேம்படுத்தும் தங்களது நோக்கம் இந்த வருட பட்ஜெட் ஒதுக்கீட்டில் பிரதிபலிக்கிறது. 2023 – 2024 ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூபாய்.6,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது 2009 – 2014 காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.879 கோடியை விட ஏழு மடங்கு அதிகமாகும். இவ்வாறு ரயில் பயணிகளின் தேவைகளை அறிந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த முக்கியத்துவம் அளித்து வரும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார்


Share it if you like it