2016- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிகையை தொடர்ந்து புதிதாக ரூ500, 2000 நோட்டுகள் அச்சிடப்பட்டன. இந்த நிலையில 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி அவற்றை செப்டம்பர் மாதம் 30- வரை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளும் படி அறிவித்திருந்தது. எனவே 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொண்டனர். இத்ந நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த கால அவகாவசம் இன்றுடன் நிறைவடைகிறது.